போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'சபாஷ் நாயுடு' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகிறது. ஹ்யூமர் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு தமிழ், தெலுங்கில் 'சபாஷ் நாயுடு' என்றும், ஹிந்தியில் 'குண்டு நாயுடு' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மனு நாராயணன் நடிக்கிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் 'பாம்பே ட்ரீம்ஸ்' இசை நாடகத்தில் நடித்தவர்.
பல்ராம் நாயுடு வேடத்தில் நடிக்கும் கமலுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் பிரம்மானந்தம்,சௌரப் சுக்லா, ஆனந்த் மகாதேவன், சித்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் கமல் எழுதுகிறார். மலையாளப்பட இயக்குநரான டி.கே.ராஜீவ்குமார் இப்படத்தை இயக்குகிறார். இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு ஜெயகிருஷ்ணா கும்மாடி, எடிட்டிங்கிற்கு ஜேம்ஸ் ஜோசப் ஆகியோர் கமலுடன் கைகோர்த்துள்ளார்கள்.
'தூங்காவனம்' படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வாவை இப்படத்தின் எக்ஸிகியூடிவ் புரொடியூஸராக நியமித்துள்ளார் கமல். அவரது இரண்டாவது மகள் அக்ஷரா இப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 16ஆம் தேதி முதல் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்குகிறது. 80% படப்பிடிப்பை அதாவது கிரீன்மேட்டிலேயே அங்கே முடித்துவிட்டு, மீதமுள்ள 20% படப்பிடிப்புகளை இந்தியாவில் ஜூலையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் கமல்.