போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழில் 24 படத்தில் சூர்யாவுடனும், விக்ரமுடன் இருமுகன் படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராகவும், சுதீப்புடன் முடிஞ்சா இவனப் புடி படத்தில் தனி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் நித்யா மேனன். இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த பாடகியும் கூட. மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
நித்யா மேனன் ஒரு பாடகியும் கூட என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. நித்யா மேனன் பாடும் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 24 படத்திற்காக தெலுங்கில் ஒரு பாடலைப் பாட வைத்துள்ளார். லாலிஜோ... என்ற பாடலை அற்புதமாகப் பாடியிருக்கிறார் நித்யா மேனன். ஆனால், இந்தப் பாடலைத் தமிழில் சக்தி ஸ்ரீ கோபாலனைப் பாட வைத்துவிட்டார் ரகுமான். தமிழிலும் நித்யா மேனனே பாடியிருந்தால் இங்கும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்.
இருந்தாலும் தெலுங்கில் நித்யா மேனன் பாடிய பாடலுக்கு அங்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம். ரகுமான் இசையில் பாடியதன் மூலம் தன்னுடைய கனவு நனவானதாக நித்யா மேனன் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளாராம். மலையாள நடிகைகள் மற்ற மொழிகளில் பாடி பெயர் வாங்குவது நித்யா மேனன் மூலமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் இப்போதைய நடிகைகளில் நித்யா மேனன்தான் சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.