‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சென்னை தமிழ், நெல்லை தமிழ், மதுரை தமிழ், கோவை தமிழ் என தமிழகத்தின் பல வட்டார தமிழில் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ராஜபாளையம் வட்டார தமிழை முன்வைத்து இதுவரை எந்தவொரு படமும் தமிழில் வெளியானதில்லை. அந்த வகையில், முதன்முறையாக ராஜபாளையம் தமிழில் அய்யனார் வீதி படம் தயாராகியுள்ளது. அதோடு, அந்த பகுதி மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக இது அமைந்திருக்கிறது என்கிறார் டைரக்டர் ஜிப்ஸி ராஜ்குமார்.
அய்யனார் வீதி படம் குறித்து அவர் கூறுகையில்,
எந்தவொரு பதவியிலோ அல்லது பொறுப்பிலோ இல்லாமல் ஊருக்காக வாழும் ஒருவரைப்பற்றிய கதைதான் இந்த அய்யனார் வீதி. இதில் பொன்வண்ணன் அய்யனார் வேடத்தில் நடித்துள்ளார். அதே ஊரில் அவரது நண்பராக சாஸ்திரிகள் வேடத்தில் கே.பாக்யராஜ் நடித்திருக்கிறார். இது நம்ம ஆளு படத்தில் அய்யர் என்று சொல்லி ஏமாற்றி நடித்த கே.பாக்யராஜ், இந்த படத்தில் அய்யர் வேடத்திலேயே நடித்திருக்கிறார். அந்த வகையில், இந்த படத்தில் கே.பாக்யராஜ்-பொன்வண்ணன் ஆகிய இருவருமே ஊருக்காக வாழும் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள். தாஸ் பாண்டியன் வில்லனாக நடிக்க, அவரது மகனாக சாட்டை யுவன் நடிக்கிறார். படத்தில் இளம் கதாநாயகன் இவர். காமெடிக்காக சிங்கம்புலி, முத்துக்காளை நடித்துள்ளனர்.
கதைப்படி, அய்யனார் வீதி என்ற கிராமத்துக்கு வரும் ஒவ்வொரு பிரச்சினை களும் பாக்யராஜ் நடித்துள்ள சாஸ்திரி கேரக்டரின் புத்திசாலித்தனத்தினால் காணாமல் போய்க்கொண்டேயிருக்கும். மேலும், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுதான் இந்த அய்யனார் வீதி படத்தின் கதை. அய்யனாராக நடித் துள்ள பொன்வண்ணன் அடாவடியாக பேசினாலும், சாஸ்திரிகளான கே.பாக்ய ராஜ் அமைதியாக பேசி பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவார். அந்த வகையில், இந்த படத்தை தாங்கிப்பிடிப்பது பாக்யராஜ்-பொன்வண்ணன் ஆகியோரது கேரக்டர்கள்தான். மற்ற கேரக்டர்களெல்லாம் கதையை நகர்த்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியமாக, ராஜபாளையம் மண்வாசனைக்கதையில் முதன்முறையாக அய்யனார்வீதி படம் தயாராவதால் அந்த பகுதி மக்களின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் டைரக்டர் ஜிப்ஸி ராஜ்குமார்.