‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக சிம்பு தெரிவித்துள்ளார். நடிகர் சங்கம் தேர்தல் ஆரம்பித்ததிலிருந்தே சிம்பு தரப்புக்கும், விஷால் தரப்புக்கும் பிரச்னைகள் எழுந்தது. சகநடிகர் என்று கூட பாராமல் விஷால் உள்ளிட்ட அந்த அணியை சேர்ந்தவர்களை ஒருமையில் வசை பாடினார் சிம்பு. தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தபின்னர் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான பணிகளை துவக்கியுள்ளனர். இதில் முதற்கட்டமாக நடிகர் சங்கத்தின் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்., 17ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பங்கேற்கவில்லை. நடிகர் சிம்புவும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிம்பு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ''பல்வேறு பிரச்னைகள் காரணமாக நடிகர் சங்கத்தை விட்டு நான் விலகுகிறேன். சங்கம் என்றால், ஒரு நடிகருக்கு ஏதாவது பிரச்னை என்றால் உதவ வேண்டும். ஆனால் நான் சிக்கல்களை சந்தித்தபோது நடிகர் சங்கம் எனக்கு எந்த ஒரு ஆதரவும் தரவில்லை, உதவவும் இல்லை.
ஜோக்கர்களாக நடிகர்கள்
சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட்டும் என்னை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அந்த கிரிக்கெட் போட்டியில் பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்களாக தெரிந்தனர் என்று கூறியுள்ளார்.