போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரு வேடங்களில் நடித்து 2006ம் ஆண்டு வெளிவந்து வித்தியாசமான படமாகவும், சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்த படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. அதன் பின் வடிவேலு நாயகனாக நடித்த படங்களும் வெற்றியடையவில்லை. கடந்த 5 வருடங்களாக வடிவேலுவின் திரையுலக வாழ்க்கையிலும் ஏற்றம் இல்லாமலே இருந்தது.
இந்த நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக சில முறை பேச்சு வார்த்தைகள் நடந்தும் அது தள்ளிக் கொண்டே போனது. இயக்குனர் ஷங்கரும் படங்களைத் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டார். சிம்புதேவன் அதற்குப் பிறகு இயக்கிய படங்களில் 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' படம் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றது. சமீபத்தில் அவர் விஜய் நாயகனாக நடித்து இயக்கிய 'புலி' படமும் தோல்வியடைந்தது.
தற்போது 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்க முன் வந்துள்ளது. இயக்குனர் ஷங்கருடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளார்கள். சிம்புதேவன் இயக்க வடிவேலு நடிக்க உள்ளார்.
இது பற்றி லைக்கா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம் “வெள்ளைக் கொடிக்கு மீண்டும் வேலை வந்து விட்டதா”, எஸ் பிக்சர்ஸ், லைக்கா இணைந்து இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளது. என்டர்டெயின்மென்ட்டுக்கு உறுதி,” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதல் பாகத்தை விட இந்தப் படத்தை அதிக பொருட்செலவுடனும், பிரம்மாண்டமாகவும் எடுக்க உள்ளார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.