‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள சினிமாவில் இருந்து கோடம்பாக்கத்துக்கு படையெடுத்துக்கொண்டிருக்கும் நடிகைகள் பெரும்பாலும் சோடை போவதில்லை. அந்த வகையில், சமீபத்திய வரவுகளான மடோனா, அனுபமா, சாய் பல்லவி, சாத்னா டைட்டஸ் என சில நடிகைகள் இறக்குமதியான நிலையில், கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தில் இன்னொரு கேரளத்து வரவான மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ஒரு படத்திற்காக சிறந்த குழந்த நட்சத்திரத்திற்கான கேரள அரசு விருதும் பெற்றவர். என்றபோதும், தற்போது அவரது கவனம் தாய்மொழியை விட மற்ற மொழிகளில்தான் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தமிழ், தெலுங்கில் முழுக்கவனத்தையும் திருப்பியுள்ள மஞ்சிமாமோகன், அச்சம் என்பது மடமையடா படத்தை பெரியஅளவில் எதிர்பார்க்கிறார். அதோடு, சிம்புவுடன் நடித்த அனுபவங்களையும் பெருமையாக கூறி வருகிறார்.
படப்பிடிப்பில் சாதாரணமாகவே காணப்படும் அவர், கேமரா முன்பு வந்து விட்டால் எத்தனை ரிஸ்க்கான காட்சி என்றாலும் சிங்கிள் டேக்கில் ஓகே செய்து விடுகிறார். அதனால் அவருடன் காம்பினேசன் காட்சிகளில் நடிக்கும்போது நாம் சொதப்பி விடக்கூடாதே என்கிற பயம் இருந்து கொண்டேயிருக்கும். அதனால் சிம்புவுடன் நடிக்கும் காட்சிகளில் முன்பே நான் நன்றாக ரிகர்சல் பார்த்துக் கொண்டுதான் நடிப்பேன் என்கிறார் மஞ்சிமா மோகன்.