போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
போக்கிரி ராஜா, உயிரே உயிரே படங்களுக்குப்பிறகு உதயநிதியுடன் மனிதன் படத்தில் நடித்துள்ள ஹன்சிகா, இப்போது ஜெயம்ரவியின் போகன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் புதிய படங்கள் இல்லை என்பதால், கதை பிடித்திருந்தால் புதிய ஹீரோக்களுடனும் நடிப்பேன். அதோடு நயன்தாரா மாதிரி கதையின் நாயகியாக நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக கூறி வந்தார். சிலர், கதையின் நாயகியாக உங்களால் பர்பாமென்ஸ் கொடுக்க முடியுமா? என்று கேட்டவர்களிடம், ரோமியோ ஜூலியட் படத்தை பாருங்கள். அப்போது என் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை வரும் என்று கூறி வந்தார் ஹன்சிகா.
இந்த நிலையில், தற்போது சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கயிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா கமிட்டாகியிருக்கிறார். ஆம்பள படத்தில் நடித்தபோது விஷாலுடன் ஏற்பட்ட நட்பு காரணமாகவே இந்த படவாய்ப்பு ஹன்சிகாவுக்கு கிடைத்திருக்கிறாம். மருது படத்தை அடுத்து மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தில் நடிக்கும் விஷால், அதையடுத்து சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். ஆக, அப்படியென்றால் அதுவரைக்கும் ஓய்ந்திருக்க முடியாதே என்பதற்காக போகன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது வேறு சில படங்களையும் கைப்பற்றி விட வேண்டும் என்றும் சில நட்பு வட்டார டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஹன்சிகா.