ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா, தமிழில் கே.டி.குஞ்சுமோன் தயாரித்த ரட்சகன் படத்தில் நடித்தார். ப்ரவீன்காந்த் இயக்கிய அந்த படத்திற்கு பிறகு நாகார்ஜூனா நடித்த சில தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் ஆகின. அதையடுத்து பயணம் படத்தில் நடித்தவர், இப்போது தோழா படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்தைப்பார்த்த பல கோலிவுட் சினிமா கலைஞர்கள், நாகர்ஜூனாவின் நடிப்பு வெகுவாக பாதித்த விட பலர் அவருக்கு போன் செய்து வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள்.
இதுபற்றி நாகர்ஜூனா கூறுகையில், எனக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் ஏராளமான நண்பர்கள் உள்ளன. அந்த வகையில், தோழா படம் ரிலீசானதும் என்னை நீண்டகாலமாக தொடர்பு கொள்ளாமல் இருந்த பல தமிழ் சினிமா நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு தோழா படத்தில் எனது நடிப்பு குறித்து கருத்து சொன்னார்கள். அதோடு என்னை தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அந்த வகையில், நடிகை குஷ்பு தோழாவில் எனது நடிப்பை சீன் பை சீன் விமர்சித்து என் மனதில் இடம் பிடித்து விட்டார். அதேபோல் நடிகை சரண்யா மற்றும் எனது மனைவி அமலா உள்ளிட்ட மேலும் சிலரும் என்னை மனதார வாழ்த்தியது என்னால் மறக்கவே முடியாது. தமிழ் நடிகர் நடிகைகள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என்கிறார் நாகார்ஜூனா.