‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கார்த்தி, நாகார்ஜுனா நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'தோழா' திரைப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சேர்த்து மூன்று நாட்களில் மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழில் 'கார்த்தியின் தோழா' என்ற பெயரிலும் தெலுங்கில் 'ஊப்பிரி' என்ற பெயரிலும் இப்படம் உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.
தமிழில் மட்டும் முதல் மூன்று நாட்களில் சுமார் 8 கோடி ரூபாயும், தெலுங்கில் 12 கோடி ரூபாயும் மற்ற மாநிலங்களில் 4 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 6 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 'பாகுபலி' படத்திற்குப் பிறகு ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான ஒரு படம் இவ்வளவு வசூலித்துள்ளது இரு மொழி திரையலகத்தினரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அடுத்து சூர்யா உள்ளிட்ட சில தமிழ் நடிகர்கள் தெலுங்கிலும், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சில தெலுங்கு நடிகர்கள் தமிழிலும் நடிக்க உள்ளனர். இரு மொழி ரசிகர்களும் இப்படிப் படங்களை ரசிக்கும் போது இரண்டு திரையுலகத்திற்கும் அது கொண்டாட்டமாக இருக்கும் என்றே கருதுகிறார்கள். இரு மொழி ரசிகர்களின் ரசனைகளும் வெவ்வேறாக இருந்தாலும் சில கதைகள் மட்டுமே இரு மொழி ரசிகர்களுக்கும் பொதுவானதாக இருக்கும். அதைப் புரிந்து கொண்டு படம் எடுத்தால் மட்டுமே இப்படி டபுள் வெற்றியைப் பெற முடியும்.