ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
விலங்குகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடி துடித்து போவார் நடிகை த்ரிஷா. அப்படிப்பட்டவர் ஒரு குதிரையின் காலை ஒடித்தவரை சும்மா இருப்பாரா.? சம்பந்தப்பட்ட நபருக்கு சாபம் வழங்கியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில், நேற்று முன்தினம் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த குதிரைப் படை போலீசாரை நோக்கி, பா.ஜ.,வினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில், எம்.எல்.ஏ., கணேஷ் ஜோஷி, சக்திமான் என்ற போலீஸ் குதிரையை, கட்டையால் பலமாக தாக்கினார். பலத்த காயமடைந்த குதிரைக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனுடைய இடது பின்னங்காலில், பல முறிவுகள் ஏற்பட்டு உள்ளன. இது தொடர்பான வீடியோ, படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிராணிகள் வதை தடுப்புச் சட்டமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலரான நடிகை த்ரிஷாவும் இந்த சம்பவத்திற்கு தனது கோப அலையை வெளிப்படுத்தியுள்ளார்.
த்ரிஷா , தன் டுவிட்டர் பக்கத்தில், குதிரையின் காலை உடைத்த பாஜக எம்எல்ஏ, நரகத்தில் எரிய வேண்டும் என்று சாபம் கொடுத்துள்ளார்.