போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சில முக்கியமான ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கினார்களாம். அப்போது ஆக்ஷன் காட்சிகளில் ரஜினிகாந்தின் நடிப்பைப் பார்த்த அக்ஷய் குமார் ஆச்சரியப்பட்டுப் போனதாகப் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
60 வயதைக் கடந்த நிலையிலும் ரஜினிகாந்த் இளைஞர்களைப் போல சண்டைக் காட்சிகளில் துறுதுறுப்பாக நடிப்பதுதான் அக்ஷயை ஆச்சரியப்படுத்தியதாம். ஹிந்தித் திரையுலகில் ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களில் பெயர் வாங்கிய அக்ஷய் குமாருக்கு ரஜினியின் ஈடுபாடும், உழைப்பும் வியக்க வைத்துவிட்டதாம். அதனால் தான் அவர் இன்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் எனப் பாராட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிவடைந்ததும் படக்குழுவினர் டில்லிக்குச் செல்ல உள்ளார்களாம். அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் படத்தின் சில முக்கியமான காட்சிகள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாம். இதற்கான சிறப்பு அனுமதியையும் படக்குழுவினர் பெற்றிருக்கிறார்களாம். 2.0 படம் 2017 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.