வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மீகாமன், என்னை அறிந்தால், நானும் ரவுடிதான், கதகளி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆத்மா. தற்போது தெறி, எஸ்-3 உள்பட சில படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு புதிய படத்தில் டான் வேடத்திலும் நடிக்கிறார். இந்தநிலையில், மாயாபவனம் என்றொரு படத்தில் அவர் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இதுபற்றி நடிகர் ஆத்மா கூறும்போது, சினிமாவில் நான் ஒரு எடிட்டராகத்தான் என்ட்ரி ஆனேன். அதன்பிறகுதான் நடிப்பதற்கு வாய்ப்புகள் அமைந்தது. அதனால் இந்த மாதிரி நடிகனாகத்தான் சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற பெரிய திட்டமெல்லாம் என்னிடம் எதுவும் இல்லை. கிடைக்கிற எந்த மாதிரியான வேடமென்றாலும் நடித்து ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்பது தான் எனது நோக்கமாக இருந்தது.
அதனால்தான் ஆரம்பத்தில் வில்லனாக நடித்தேன். சில படங்களில் அதிரடி வில்லன், சில படங்களில் காமெடி கலந்த வில்லன் என படங்களுக்கு ஏற்ப நடித்து வந்தேன். அப்படி நடித்து வந்தபோதுதான் மாயாபவனம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு சரித்திர காலத்து படம். 1936களில் நடக்கும் கதை. அதில் சந்திரகாந்தா என்றொரு வேடத்தில் நடிக்கிறேன். படம் முழுக்க அரசர் காலத்து கெட்டப்பில் நடித்திருப்பதோடு, சுத்தமான இலக்கிய தமிழ் பேசியும் நடித்திருக்கிறேன். அது புதிய அனுபவமாக இருந்தது.
மேலும், இப்படி மாயாபவனம் படத்தில் நான் கதாநாயகியாக நடித்து விட்டபோதும், கதாநாயகனாகவே சினிமாவை தொடரும் எண்ணமில்லை. எந்தமாதிரியான வேடம் என்றாலும் தொடர்ந்து நடிப்பேன். வில்லன், நாயகன், குணசித்ரம், காமெடி என எது கிடைத்தாலும் நடித்து சினிமாவில் நல்லதொரு நடிகனாக வலம் வரவேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் ஆத்மா.