போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஜெயம் ரவி நடித்து அவருக்கு இந்த ஆண்டின் முதல் படமாக வெளிவந்த படம் 'மிருதன்'. விமர்சகர்களால் அரைவேக்காட்டுத்தனமான படம் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் படம் நல்ல வசூலைக் கொடுத்ததாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், எதிர்பார்த்த வெற்றி இந்தப் படத்திற்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆங்கிலப் படங்களைப் பார்த்து இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் சூடு போட்டுக் கொண்டதாகத்தான் பலரும் விமர்சித்திருந்தார்கள். திரையுலகத்திலும் அந்தப் படத்தைப் பற்றி பலரும் பல்வேறு விதமாக கமெண்ட் அடித்தார்கள்.
ஆனால், எந்த விமர்சனங்களைப் பற்றியும் கவலைப்படாமல் இயக்குனர் சக்தி சௌந்தரராஜனும், ஜெயம் ரவியும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாகச் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு புதிய கூட்டணியில் ஒரு படம் வெளிவரும் போது, அடுத்து அதே கூட்டணி மீண்டும் இணையப் போவதாக ஒரு பரபரப்பிற்காகவாவது இப்படி பல செய்திகளை படம் சம்பந்தப்பட்டவர்களே கிளப்பிவிடுவார்கள். அப்படி அறிவிப்பு வந்து அறிவிப்போடு காணாமல் போன படங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
ஜெயம் ரவி நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த 'ரோமியோ ஜுலியட்' படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் மீண்டும் இணையப் போவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால், இதுவரை அந்தப் படம் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.
'மிருதன்' கூட்டணியும் அதே போல இழுத்துக் கொண்டு போகுமா அல்லது வெறும் அறிவிப்பு மிரட்டல்தானா என்பது விரைவில் தெரிந்துவிடும்.