ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினாலே பிரச்சினை வெடிக்கும். இந்த சூழ்நிலையில் இட ஒதுக்கீட்டினால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் உள்ள பணக்காரர்கள் மட்டுமே பயன் அடைகிறார்கள். மற்றவர்கள் கூலித் தொழிலாளிகளாவும், சிறுநீரகத்தை விற்று வாழ்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் படித்து வேலை பெற்று உயர் பதவியில் இருப்பவர்கள் அதன் பிறகு தஙகள் ஜாதி மக்களை திரும்பி பார்ப்பதும் இல்லை. அவர்கள் உயர்வுக்கு உழைப்பதும் இல்லை. எனவே இட ஒதுக்கீட்டில் மாற்றம் தேவை என வலியுறுத்தி ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். அந்தப் படத்திற்கு நல்லவாயன் நாரவாயன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் மூலம் படித்து கலெக்டராகவும், உயர் அதிகாரிகளாகவும் உயர்ந்தவர்கள் அந்த பதவிகளை தங்கள் மக்களுக்காக தூக்கி எறிந்து விட்டு வருகிற மாதிரியான கதையாம்.
அஜ்மல், ஆருஷி ஹீரோ, ஹீரோயின்களாக நடித்துள்ளனர், சந்தோஷ், பன்சி இரண்டாவது நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். நாசர், கோட்டா சீனிவாச ராவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஆர்.பி.பட்நாயக் இசை அமைத்துள்ளார். பாஸ்கர்ராவ் தயாரித்து, இயக்கி உள்ளார்.