‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் தற்போது முன்னணியில் இருப்பது கீர்த்தி சுரேஷ்தான். 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதனைத் தொடர்ந்து 'ரஜினி முருகன்' படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக நடித்தார். விக்ரம் பிரபு, சிவாவைத் தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக 'மிரட்டு' படத்திலும் நடித்துள்ளார். பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதோடு சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நர்ஸ் அக்கா படத்திலும் கீர்த்தி சுரேஷ்தான் நாயகி.
இதுதவிர பாபி சிம்ஹாவோடு 'பாம்புச் சட்டை' படத்திலும் நடித்து வருகிறார். அவர் நடித்த படங்களான இது என்ன மாயம், ரஜினி முருகன் இரண்டு படங்களும் மாதக்கணக்கில் முடங்கிக்கிடந்த பிறகே திரைக்கு வந்தன. அவர் நடித்த பாம்புசட்டை படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடக்கிறது. கீர்த்தி சுரேஷின் முதல் தமிழ்ப்படமான இது என்ன மாயம் படு தோல்விப்படம். இப்படி பல நெகட்டிவ்வான விஷயங்களால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை அவர் மீது, குத்தப்பட்ட நேரத்தில்... ரஜினி முருகன் படத்தின் வெற்றி அவரை காப்பாற்றி உள்ளது.
தற்போது விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. ரஜினி முருகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ், விஜய் பட வாய்ப்பு வந்த பிறகு ஒரு மாத இடைவெளியில் மீண்டும் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அவரது தற்போதைய சம்பளம் 75 லட்சம்