‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து எழுதிய சிறுகதை தொகுப்பு பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த வெளியீட்டு விழாவுக்கு சமீபத்தில் வைரமுத்து சென்றார். அப்போது இலங்கையில் இறுதியுத்தம் நடந்த முள்ளி வாய்க்கால், முல்லைத்தீவு உள்ளிட்ட இலங்கை தமிழர்கள் வசிக்கும் பல இடங்களுக்கும் சென்று வந்தார்.
அங்கு சென்றபோது தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை முள்ளிவாய்க்கால் என்ற தலைப்பில் கவிதையாக எழுதி அதனையே கவிதை வீடியோ ஆல்பமாக வெளியிட்டுள்ளார். வைரமுத்து கவிதை வாசிக்கும் பின்னணில் அவர் இலங்கை சென்று வந்த காட்சிகள் புகைப்படங்களாக இடம்பெறுகிறது. சோகத்துடன் நடந்து அவர் கவிதை பாடும் காட்சிகள் படம்பிடிக்கபட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தை வைரமுத்து யூ டியூபில் வெளியிட்டுள்ளார்.
“இந்த நூற்றாண்டில் சர்வதேச சமூகம் மறக்க முடியாத மிகப் பெரிய இனப்படுகொலை நிகழ்ந்த இடம் முள்ளிவாய்க்கால். அந்த இடத்தில் அடையாளங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் நினைவுகளின் சோகத்தை யார் அழிப்பது” என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். “உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் காதுகளுக்கு கவிஞரின் உள்ளகிடக்கை கொண்டு செல்வதற்கான முயற்சி” என்கிறது கவிஞர் வட்டாரம்.