நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
முன்னணி தெலுங்குப்பட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'பாகுபலி'. தமிழ் - தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவான 'பாகுபலி' படம் ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றியடைந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மிகப்பெரிய தொகையை வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
கடந்த சில மாதங்களாக பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தற்போது கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. என்றாலும், 'பாகுபலி 2' ஆம் பாகம் தாமதமாவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இது பற்றி ராஜமௌலியிடம் கேட்டால், “படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து வருகிறது. 2-ஆம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. கடந்த படப்பிடிப்பை திட்டமிட்டதற்கு முன்னதாகவே முடித்துள்ளோம்.” என்று கூறியுள்ள ராஜமௌலி, "இந்தப் படத்தின் 3-ஆம் பாகமும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'பாகுபலி'யின் கதை பெரியது. எனவே அது தொடரும்." என்றும் தெரிவித்துள்ளார்.
2-ஆம் பாகத்துக்கு முடிவு (Baahubali: The Conclusion) எனப் பெயர் வைத்தநிலையில் தற்போது 3 ஆம் பாகமும் இருப்பதாக சொல்வதால் பாகுபலி படத்தின் டேக்லைன் மாற வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது.