‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை சில நிறுவனங்கள் முறைகேடாக விற்பனை செய்து வருவதாகவும், ஒலிபரப்பி வருவதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் இளையராஜாவின் பாடல்களை விற்கவும், ஒலிபரப்பவும் 5 நிறுவனங்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அந்த 5 நிறுவனங்களும் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கோர்ட், இந்த பிரச்னையை தீர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாசை சட்ட ஆணையராக நியமித்தது. அதன்படி இந்த வழக்கு ஐகோர்ட்டின் சமரச தீர்வு மையத்திற்கு வந்தது. நேற்று இந்த மையத்தின் முன் சமரச பேச்சு நடந்தது. இதில் 5 நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டர். இளையராஜாவும் நேரில் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை 25ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.