‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலா இயக்கும் படங்களில் ஒரு நாயகன் நடிக்கிறார் என்றால் அந்தப் படம் வெளிவந்ததற்குப் பிறகு அந்த நாயகனுக்கு திருப்புமுனை ஏற்படும் என்பது நிச்சயம். அப்படி ஒரு அனுபவத்தை விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா ஆகியோர் ஏற்கெனவே பெற்றிருக்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு அனுபவம் சசிகுமாருக்குக் கிடைக்காது போலிருக்கிறது. தாரை தப்பட்டை படத்தில் பணம் போட்டு படத்தையும் தயாரித்து சரிவர உருவாக்கப்படாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தனக்கிருந்த பெயரையும் கெடுத்துக் கொண்டார் என்று வினியோகஸ்தர்களே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
ஒரு கரகாட்டக் கலைஞரோ, ஒரு நாதஸ்வரக் கலைஞரோ அல்லது ஒரு கிராமியக் கலைஞரோ எப்படி இருக்க மாட்டார்களோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தைத்தான் சசிகுமாருக்காக பாலா உருவாக்கிவிட்டார் என்று அவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள். ஒரு ஊரில் உள்ள பெரிய மனிதர் கூட தினமும் பட்டு வேட்டி, சில்க் சட்டை, அங்கவஸ்திரம், எண்ணெய் வைத்து வாரிய தலை என தினமும் சுத்தமாக வலம் வர மாட்டார்.
ஆனால், கிராமியக் கலைஞர்கள் அவர்களுக்கு வேலை இருக்கிறதோ இல்லையோ தினமும் தங்களை பளிச்செனத் தெரியும்படி ஆடை அணிந்து அழகுபடுத்திக் கொண்டுதான் வலம் வருவார்கள். ஆனால், தாரை தப்பட்டை படத்தில் கரகாட்டக் குழுவுக்கே தலைவரான சசிகுமார் முந்தைய பாலா படங்களைப் போலவே அழுக்கு மனிதராக வலம் வருவது அவர்களைப் பற்றித் தெரிந்தவர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
படத்திற்கான பல எதிர்மறையான விஷயங்களில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பாலா அடுத்த படத்திலாவது பழைய பாலாவாக வரவேண்டும் என்றே பாலாவின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.