‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தனுஷ்-பிரபுசாலமன் இணைந்துள்ள ரயில் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது. மாரி படத்தில் நடித்து முடித்த பிறகு தங்கமகனில் நடித்துக்கொண்டே இந்த படத்திற்கும் கால்சீட் கொடுத்து நடித்து வந்தார் தனுஷ். முழுக்க முழுக்க ரயிலுக்குள் நடக்கும் கதை என்பதால் ரயில் செட்டிலேயே படமாக்கப்பட்டு வந்தது. இறுதிகட்டமாகத்தான் வடஇந்தியா சென்று ஒரிசாவில் அவுட்டோர் காட்சிகளை படமாக்கினார் பிரபுசாலமன்.
மேலும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளும் நடந்து வந்த நிலையில், தற்போது சில பேட்ஜ்ஒர்க் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். அதன்காரணமாக, இன்று சென்னையிலுள்ள பின்னி மில்லில் அமைக்கப்பட்டுள்ள ரயில் செட்டுக்குள் படப்பிடிப்பு நடக்கிறது. இன்னும் சில தினங்களுக்கு இந்த படப்பிடிப்பு தொடரும் என்று தெரிகிறது. இதில், தனுஷ், கீர்த்தி சுரேஷ், கருணாகரன், இமான் அண்ணாச்சி உள்பட பலர் கலந்து கொண்டு நடிக்கிறார்களாம்.