போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர் சிவகுமார் அபார நினைவாற்றல் கொண்டவர். கம்ப ராமாயணத்தை மனப்பாடம் செய்து 100 கம்ப ராமாயண பாடல்களுடன் இரண்டு மணிநேரம் எந்த குறிப்பும் இல்லாமல், இடைவெளியும் இல்லாமல் பேசி சாதனை படைத்தார். அதேபோன்று மகாபாரதத்தை மனப்பாடம் செய்து இரண்டு மணி நேரம் இடைவெளியில்லாமல் பேசி மீண்டும் சாதனை படைத்தார். அடுத்து அவர் திருக்குறளை மனப்பாடம் செய்து இடைவெளியில்லாமல் பேசி சாதனை படைக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:
உங்களின் அபூர்வ நினைவாற்றலுக்கு காரணம் என்ன?
நான் தொடர்ந்து செய்து வரும் யோகாசனமும், கடைபிடிக்கும் உணவு கட்டுப்பாடும் தான் காரணம். இந்த இரண்டையும் சரியாக செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த சாதனையை படைக்கலாம்.
இந்த முயற்சி எப்படி உருவானது?
நான் சென்னைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓவியம் ,பயிற்சி என்று 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. நடிகனாக சினிமா, நாடகம், டிவி என்று 40 ஆண்டுகள் போய்விட்டன. இது போதும் என்று முடிவெடுத்த பிறகு மேடைப் பேச்சு பக்கம் தாவினேன். நான் பெரிய பேச்சாளன் இல்லை. அடுக்கு மொழி, கவர்ச்சி நடை என்றெல்லாம் என்னால் பேசமுடியாது. அப்போதுதான் இப்படி தலைப்பு வைத்து உரையாற்றினேன். இப்படி இதுவரை 16 உரைகள் ஆற்றி விட்டேன் அவற்றில் 15 உரைகள் ஒளிபரப்பாகி விட்டன. அந்த உரைகளில் கம்பராமாயணம். மகாபாரதம் உரைகள் வேறுபட்ட அனுபவங்கள்.
தொடர் சொற்பொழிவிற்காக ஒத்திகை செய்வதுண்டா?
நான் நடைப் பயிற்சி போகும் போது இதைப் பலரிடம் பேசிக்காட்ட முயன்றிருக்கிறேன். பாதி பாதி பேசிக் காட்டியிருக்கிறேன். நான் ஆரம்பித்ததும் பலரை தலைதெறிக்க ஓட விட்டிருக்கிறேன். இருந்தாலும் சில பேராசிரியர்கள் உள்பட சிலரிடம் முழுதாகப் பேசிக் காட்டியுள்ளேன். .
அடுத்த முயற்சி...?
யேசுவை பற்றியும், குரான் பற்றியும் பேசலாமே என்று பலரும் சொல்கிறார்கள். இயேசு மீதும், குரான் மீதும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் என் தமிழிலேயே நான் பேச வேண்டிய விஷயங்கள், இலக்கணங்கள், இலக்கியங்கள், தத்துவங்கள் கொட்டிக்கிடக்கிறது. அடுத்து திருக்குறளை மனப்பாடம் செய்து பேச திட்டமிட்டிருக்கிறேன். உலகிலேயே ஒரு மொழியை உயர்த்தியோ, ஒரு மதத்தை உயர்த்தியோ பேசாமல் மனிதம் பேசிய இலக்கியம் திருக்குறள், அதுதான் என் அடுத்த இலக்கு. இது கடினமான பணி என்பதால் நான்கைந்து வருடங்களாவது ஆகும் என்றார்.