‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் இந்த மாதத் துவக்கத்தில் பலரது வாழ்க்கையையும் திருப்பிப் போட்டுவிட்டது. அந்த பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாமல் இருக்கிறார்கள். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களுக்காக களமிறங்கி வேலை பார்த்து சென்னையில் மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட மற்ற இடங்களிலும் மனித நேயம் உருவாகக் காரணமாக இருந்தார்கள். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம், என்ன செய்யலாம் என்பதைப் பற்றி பலரும் சிந்தித்து அதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரவர் துறைகளிலும் ஆறுதல் தரும் பல விஷயங்களைப் பலர் செய்து வருகிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி 'தி ரெய்ன் சாங்' அதாவது 'மழை பாடல்' என்ற ஒரு ஆங்கிலப் பாடலை உருவாக்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு பவதாரிணி இசையமைக்க பிரபல பாடகியான ஷாலினி சிங் பாடலை எழுதியுள்ளார். இருவரும் சேர்ந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், முழு பாடலும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழ் மக்கள்தானே, மண்ணின் இசையை தமிழகத்தில் தந்த இளையராஜாவின் மகள் அதை தமிழிலேயே தந்திருக்கலாமே.