போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கங்காரு படத்தில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா. பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் நடிகை இவர். அதன்பிறகு வந்தா மல படத்தில் சென்னை பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அதோடு ஹீரோக்களே கதாநாயகிகளிடம் உதட்டு முத்தம் கேட்டு துரத்தி வந்தநிலையில், வந்தா மல படத்தில் ஹீரோவுக்கு உதட்டு முத்தம் கொடுக்க துரத்தும் ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரீ பிரியங்கா. ஆக, வழக்கமான பாதையில் இருந்து மாறி நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் அவர். அதையடுத்து தற்போது சாரல், கோடைமழை ஆகிய படங்களில் நடித்துள்ள ஸ்ரீ பிரியங்கா, மேலும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் தற்போது நடிக்கிறார்.
இந்த நிலையில், வெளிவரயிருக்கும் சாரல், கோடைமழை படங்கள் பற்றி ஸ்ரீ பிரியங்கா கூறுகையில், இந்த இரண்டு படங்களும் வித்தியாசமான காதல் கதைகளில் உருவாகியிருக்கிறது. இதில், சாரல் படத்தில் ஒரு அமைதியான பெண்ணாக நடித்திருக்கிறேன். வந்தா மல படத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். அதோடு காதல் உணர்வுகளை இயல்பாக பிரதிபலித்திருக்கிறேன். மேலும், கோடைமழை இன்னொரு புதுமையான காதல் கதை. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்திலும் நடிப்பில் ஸ்கோர் பண்ண நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது எனக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறும் ஸ்ரீ பிரியங்கா, தமிழ் நடிகையான எனக்கு தமிழ் டைரக்டர்கள் நல்ல பட வாய்ப்புகளை கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்றும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறார்.