ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சென்னை அடையாறில் சமந்தா படித்து வந்த காலகட்டத்தில் இருந்தே அவருக்கு நிறைய தோழிகள் உண்டு. அதேபோல் ஐதராபாத்திலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவருடன் பழகி இப்போது சென்னையைப்போலவே அங்கும் அவருக்கு ஒரு நட்பு வட்டாரம் உருவாகியிருக்கிறதாம். அதனால் அவர் எப்போது வீட்டில் ஓய்வாக இருந்தாலும், அவரை காண ஒரு பெரும் தோழிகள் கூட்டம் கூடி விடுமாம். அதனால் அவர்களுடன் நேரம் போவதே தெரியாமல் ஜாலி அரட்டையில் இறங்கி விடுவாராம் சமந்தா. இது அவரது ஐதராபாத் இல்லத்தில் அடிக்கடி நடக்குமாம்.
ஆனால், அஞ்சான் படத்திற்கு பிறகு அவர் சென்னைக்கு வந்து விட்டதால், ஆந்திர தோழிகளை ரொம்பவே மிஸ் பண்ணுகிறாராம். காரணம், தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் அரட்டை அரங்கத்திற்கு அவருக்கு போதிய நேரமே கிடைப்பதில்லையாம். அதனால் நாளடைவில் சமந்தாவை தோழிகள் தொடர்பு கொள்வதே குறைந்து விட்டதாம். இந்த நிலையில், தற்போது சமந்தாவிற்கு சில வெளிநாட்டு தோழிகள் கிடைத்திருக்கிறார்களாம். அதனால் தான் ஒரு படத்தில் நடித்து முடித்ததும் கிடைக்கும் சில நாள் இடைவெளியில் தனது பெற்றோருடன் வெளிநாடுகளுக்கு டூர் அடிக்கிறார் சமந்தா. அப்போது அங்குள்ள தோழிகளையும் சந்தித்து மகிழ்கிறாராம்.