போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
முன்பெல்லாம் சினிமாக்களில் கதாநாயகிகள் கவர்ச்சியில் எல்லை தாண்ட மாட்டார்கள். அதனால் இடைவேளைக்குப்பிறகு ரசிகர்களை ரிலாக்ஸ் பண்ணுவதற்காக ஒரு கவர்ச்சி நடிகையை நடனமாட வைப்பார்கள். ஆனால் கதாநாயகிகளே கவர்ச்சி நடிகைகளாகவும் மாறிய பிறகு அந்த நிலை மாறி விட்டது. ஒவ்வொரு பாடல்களிலுமே கவர்ச்சிதான் என்ற நிலையாகி விட்டது. அதேபோல் முன்னணி ஹீரோயினிகளே சமீபகாலமாக குத்துப்பாட்டுக்கும் ஆடத் தொடங்கி விட்டனர். கேட்கிற சம்பளத்தை கிடைத்தால் அயிட்டம் பாடல்களுக்கு ஆட எந்த முன்னணி நடிகைகளும் மறுப்பதில்லை.
இந்த நிலையில், சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலில் குத்தாட்டமாடிய அஞ்சலி, தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் சரைனொடு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதையடுத்து, அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படங்களை சேர்ந்த சிலர், ஹீரோயினாக நடிக்கும்போது அயிட்டம் பாடலுக்கு நடனமாடினால் இந்த படங்களின் வியாபாரம் பாதிக்குமே என்றார்களாம். அதற்கு, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட எத்தனையோ நடிகைகள் ஒரு பாட்டுக்கு நடனமாடிதானே வருகிறார்கள். இப்போது இதெல்லாம் ஒரு பேஷனாகி விட்டது. இதனால் நான் நடிக்கிற படங்களுக்கு வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்கிறாராம் அஞ்சலி.