‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ராவணன், கடல் என தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்த மணிரத்னத்துக்கு அவர் கடைசியாக இயக்கிய 'ஓகே கண்மணி' படம் வெற்றிப்படமாக அமைந்தது. ஓகே கண்மணி படத்தைத் தொடர்ந்து அடுத்து இயக்கும் படத்தின் கதையையும் இளைஞர்களை மனதில் வைத்துதான் எழுதியிருக்கிறாராம் மணிரத்னம். கார்த்தி, நான் ஈ நானி இருவரும் கதாநாயர்களாக நடிக்க இருக்கும் இப்படத்திற்கு 'வெள்ளைப் பூக்கள்' என்று டைட்டில் வைத்திருக்கிறார் மணிரத்னம்.
இந்தப்படத்தில் முதலில் 'ஓகே கண்மணி' படத்தில் நடித்த துல்கர் சல்மான்தான் கார்த்தி உடன் இணைந்து நடிக்கவிருந்தார். திட்டமிட்டபடி மணிரத்னம் படப்பிடிப்பை தொடங்காததினால் துல்கரின் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், தற்போது அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் நானி ஒப்பந்தமாகியுள்ளளார். இந்தப்படத்தில் கார்த்தி, நானிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. மணிரத்னத்தின் ஆஸ்தான் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இப்படத்துக்கும் இசை அமைக்கிறார். வெள்ளைப்பூக்கள் படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம். தமிழ் தெலுங்கு மொழிகளுக்கு கார்த்தி, நானி இருவரையும், ஹிந்தி பதிப்புக்கு நானி, அபிஷேக் பச்சன் இருவரையும் நடிக்க வைக்க மணிரத்னம் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்.