‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'களவாணி' படத்தின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து மெரினா, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இப்போது ''144'' என்ற படத்தில் நடித்துள்ளார். திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், அபி அண்ட் அபி சார்பில் அபினேஷ் இளங்கோவனும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஓவியாவுடன், மிர்சி சிவா, அசோக் செல்வன், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளார்கள். இது மதுரையை கதை களமாக கொண்ட காமெடி படம். இரண்டு ஊருக்கு இடையே நடக்கும் பிரச்னையை காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜி.மணி. இப்படம் வருகிற நவ.27ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில், ஓவியா நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில், தான் தவளைக்கறி விரும்பி சாப்பிடுவதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது... '144' நல்ல அருமையான காமெடி படம். இந்தப்படம் தனக்கு எனக்கு நல்ல திருப்புமுனையை தரும் என்று நம்புகிறேன். இப்போது எல்லாம் படங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. போராடித்தான் ஒவ்வொரு பட வாய்ப்பும் கிடைக்கிறது என்றவர், நான் நன்றாக சாப்பிடக்கூடியவள். நண்பர்கள் எல்லோரும் என்னை அண்டா என்று தான் கூப்பிடுவார்கள். பாம்பு, கரப்பான் பூச்சி உள்ளிட்ட கறிகள் எல்லாம் சாப்பிட்டுள்ளேன். குறிப்பாக தவளைக்கறி நான் விரும்பி சாப்பிடுவேன் என்று கூறினார்.