‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்த கன்னட நடிகை நந்திதா. முதல் படமே சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்தவர் இப்போது விமலுக்கு ஜோடியாக அஞ்சல என்ற படத்திலும் நடித்துள்ளார். தங்கம் சரவணன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் பசுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்தது பற்றி நந்திதா கூறும்போது, ஒரு படத்தின் கதையை கேட்கும்போதே அது வெற்றி பெறுமா? பெறாதா? என்பதை ஓரளவு கணித்து விட முடியும். அந்த வகையில், இந்த படத்திற்கான கதையை இயக்குனர் சொன்னபோதே இது வெற்றி படம் என்று நான் முடிவு செய்து விட்டேன். அதோடு, படத்தின் நாயகன் விமல் என்று சொன்னபோது அது இன்னும் உறுதியானது. காரணம், வி செண்டிமென்ட் எனக்கு எப்போது சக்சஸ்தான் கொடுத்துள்ளது.
அதாவது, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் விஜயசேதுபதி, முண்டாசுப்பட்டியில் விஷ்ணு, புலியில் விஜய் என வி பெயரின் முதல் எழுத்தாக அமைந்த நடிகர்களின் படங்கள் எனக்கு ஹிட்டாகவே அமைந்தன. அதனால் அந்த வரிசையில் விமலுடன் நடித்துள்ள இந்த அஞ்சல படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும், நான் ஓரளவு தமிழ் நன்றாகவே பேசுவேன். ஆனபோதும், நான் பேசுவதில் ஏதாவது குறையை கண்டுபிடித்து என்னை படப்பிடிப்பு தளத்தில் கலாய்த்துக்கொண்டேயிருந்தார் விமல். ஆனால் நல்ல நண்பராக பழகினார். அவர் மட்டுமின்றி வி எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் என்னுடன் நடித்த எல்லா நடிகர்களுமே எனக்கு நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள் என்கிறார் நந்திதா.