கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
தீபாவளிக்கு முன்னதாக ஆயுத பூஜை தினத்தன்று வெளிவந்த படம் 'நானும் ரௌடிதான்'. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா முதன் முறையாக இணைந்து நடித்த இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டுக்களுடனும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் இன்று 25வது நாளைத் தொட்டுள்ளது. தீபாவளிக்கு வெளிவந்த இரண்டு பெரும் நட்சத்திரங்களின் படங்களான 'வேதாளம், தூங்காவனம்' ஆகிய படங்களின் தாக்கத்திலும் 'நானும் ரௌடிதான்' தன்னிடத்தை இழக்காமல் தாங்கி நிற்கிறது.
இதுவரை சுமார் 25 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சிறப்பை இந்தப் படம் பெற்றுள்ளது. பல காதல் கிசுகிசுக்கள் , சண்டை வதந்திகள் என பல விஷயங்களைக் கடந்து வந்து இந்தப் படம் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் விஜய் சேதுபதியை தன்னுடைய தயாரிப்பாளர் தனுஷ் நடிக்க வைக்க உள்ளார். இந்த ஆண்டில் வெளிவந்த வெற்றிப் படங்களில் 'நானும் ரௌடிதான்' படமும் முக்கிய படமாக அமைந்துவிட்டது.