‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
செய்தியின் தலைப்பைப் பார்த்து யாரும் அதிர்ச்சியடைய மாட்டீர்கள் என்று தெரியும். த்ரிஷா நடித்துள்ள 50வது படமான 'தூங்காவனம்' நேற்று வெளியாகி, அவருக்கு ஒரு சாதனை மைல்கல்லைத் தொட வைத்திருக்கிறது. படமும், த்ரிஷாவின் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் 50 படங்களைக் கடந்து சாதனை புரிந்த நடிகைகளின் வரிசையில் த்ரிஷாவும் வெற்றிகரமாக இடம் பெற்றுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் சிம்ரனுக்குப் பிறகு அதிகம் பரபரப்பாகப் பேசப்பட்ட நடிகை த்ரிஷா மட்டுமே. தமிழ், தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்துள்ள த்ரிஷா ஹிந்தி, மலையாளத்தில் தலா ஒரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இரு மொழிகளில் மட்டுமே அதிகம் நடித்து 50 படங்களை எட்டியிருப்பது சாதாரண விஷயமல்ல. 2002ம் ஆண்டு வெளிவந்த 'மௌனம் பேசியதே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா அன்றிலிருந்து இன்றுவரை புகழின் வெளிச்சத்திலேயே இருந்து வருகிறார்.