போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இசை அமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட்பிரபு ஆரம்பத்தில் நடிகராகத்தான் சினிமாவில் அறிமுகமானார். சிறு சிறு வேடங்களில் நடித்த அவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். என்றாலும் தன் நண்பர்களுடன் இணைந்து அவர் விளையாட்டாக எடுத்த சென்னை 28 படம் செம ஹிட்டாக கமர்ஷில் இயக்குனராகிவிட்டார். அடுத்து அவர் இயக்கிய சரோஜா, கோவா, படங்கள் சுமாராக ஓடியது. அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. அடுத்து இயக்கிய பிரியாணியும், மாஸ் படமும் வெங்கட்பிரபுவை ஓரம்கட்டியது.
தற்போது அவர் பெரிய ஹீரோக்களுக்கான கதையை வைத்திருந்தும் யாரும் நடிக்க முன்வரவில்லை. அப்படியே ஒரு சிலர் நட்புக்காக வந்தாலும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்து தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் வெங்கட்பிரபு.
இதனால் தனக்கு அடையாளத்தை கொடுத்த சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் என்ன என்று யோசித்து அதற்கான ஸ்கிரிப்டை எழுத ஆரம்பித்து விட்டார். சென்னை 28ல் உருவான காமெடி கிரிக்கெட் டீம் பெரிய அளவில் வளர்ந்து விடுவதாகவும். அது பெரிய போட்டிகளில் எப்படி தந்திரமாக ஜெயிக்கிறது. அதற்கு ஏற்படும் பிரச்சினைகள் என்று கதையை நகர்த்த முடிவு செய்திருக்கிறார். தம்பி பிரேம்ஜியும், விஜய் வசந்தும், மிர்ச்சி சிவாவும் தயாராக இருக்கிறார்கள் . ஜெய்யின் தேதி மட்டும் கிடைத்து விட்டால் படத்தை ஆரம்பிக்கிற நிலையில் இருக்கிறார். விஜயலட்சுமிக்கு திருமணமாகிவிட்டதால் அதற்கு பதில் வேறொரு ஹீரோயின் நடிக்கலாம் என்கிறார்கள்.