தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தமிழ்த் திரையுலகில் எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் முதலில் அறிமுகப்படுத்துபவர் கமல்ஹாசன். டிடிஎஸ் ஒலி தொழில்நுட்பத்தையும், டிஜிட்டல் ஒளிப்பதிவையும், ஆரோ ஒலி அமைப்பையும் இங்கு முதன் முதலில் பயன்படுத்தியவரும் அவர்தான். இப்படி வெளிநாடுகளில் வரும் மாற்றங்களை இங்கு உடனுக்குடன் கொண்டு வந்துவிடுவார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களைக் காட்டிலும் சினிமா சார்ந்த பல தொழில்நுட்ப விஷயங்களில் கமல்ஹாசனின் திறமையுடன் யாரும் போட்டி போட முடியாது என்றே சொல்வார்கள்.
நமது தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த விரைவில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் சவுண்ட் ஸ்டுடியோ ஒன்றை கமல்ஹாசன் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறாராம். அதி நவீனக் கருவிகளுடன் அதை உருவாக்க உள்ளாராம். 'விஸ்வரூபம், உத்தம வில்லன், தூங்காவனம்' போன்ற படங்களின் ஒலி அமைப்பு வேலைகளை கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுதான் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு படத்திற்கும் அமெரிக்கா சென்று முடித்து வருவது அதிக செலவாகிறது என்பதால் அப்படி ஒரு ஸ்டுடியோவை இங்கேயே உருவாக்கினால் அது பலருக்கும் உதவியாக இருக்கும் என முடிவெடுத்துள்ளாராம். அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.