போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது. மலேசியாவிற்குச் சென்ற ரஜினிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். அவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்து தினமும் படப்பிடிப்புக்குச் செல்லும் வழியில் மக்கள் அவரைப் பார்ப்பதற்காக வழி நெடுகிலும் காத்திருக்கிறார்களாம். பலரும் ரஜினியைச் சந்தித்துப் பேச முயல்வதாலும், புகைப்படம் எடுத்துக் கொள்ள முயல்வதாலும் பாதுகாவலர்களும், போலீசாரும் திணறி வருவதாகத் தகவல்.
ரஜினியும் முடிந்தவரை அனைவரையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறாராம். ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் எங்கெல்லாம் செல்கிறாரோ அதையெல்லாம் புகைப்படம் எடுத்து உடனுக்குடன் பகிர்ந்து வருகிறார்கள். சிலர் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்கள். ரஜினிகாந்த் அங்கு இருக்கும் மீதியுள்ள நாட்களிலும் இது தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் மலேசியா சென்றிருப்பதால் மலேசிய தமிழ் மக்களில் பலர் ரஜினிகாந்தைப் பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எந்த ஒரு நடிகருக்கும் இப்படி ஒரு வரவேற்பும், புகழும் அங்கு கிடைத்திருக்காது என்றே மலேசிய தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் கூட ரஜினிகாந்த் இப்படி இருந்ததில்லை மலேசிய மக்களின் மீது அதிக பாசத்துடன் நடந்து கொள்கிறார் என அவரைப் பற்றிப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். 'கபாலி' படப்பிடிப்பு முடியும் வரை 'மலேசியாவில் ரஜினிகாந்த்' பலருக்கு மறக்க முடியாத நினைவுகளைத் தரும் என்பது மட்டும் உண்மை.