ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
ஜீவா தற்போது நயன்தாராவுடன் திருநாள் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது முடிந்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. தீபாவளிக்கு டிரைலர் வெளியிடப்படுகிறது. தீபாளிக்கு பிறகு பாடல்கள் வெளியிடப்படுகிறது. படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பிறகு போக்கிரி ராஜாவில் தற்போது நடித்து வருகிறார் ஜீவா. இதனை புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார், ஹன்சிகா மோத்வானி ஹீரோயின். சிபிராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். ராம் பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார்.
இந்தப் படத்திற்கு பிறகு ஜீவா நடிக்கும் படத்தை முத்துகுமார் என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஜெமினி கணேசன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இதற்காக பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றிருக்கிறார்கள். அவர்களும் படத்தின் கதையை கேட்ட பிறகே அனுமதியளித்திருக்கிறார்கள். விரைவில் இதன் படப்பிடிப்புகள் துவங்குகிறது.