போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சுந்தபாண்டியன், கொம்பன் படங்களின் இயக்குனர் முத்தையாவின் பெயரில் போலி பேஸ்புக் இயங்குவதாகவும், அதன் மூலம் நடிப்பு வாய்ப்பு தருவதாக சிலர் ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நான் பேஸ்புக், டுவிட்டர் போன்ற எந்தவிதமான சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவதில்லை. ஆனால் என் பெயரில் சிலர் சமூக வளைத்தளங்களில் பொய்யான கணக்குகளை தொடங்கி அதில் தவறான தகவல்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அதேபோல எனது பெயரை பயன்படுத்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறோம். என்று பலர் போனில் தொடர்பு கொண்டு பலரை மோசடி செய்யும் தகவல்களும் எனக்கு கிடைத்திருக்கிறது. எனது பெயரில் எந்த சமூக வலைத்தளங்களும் இல்லை என்பதையும். என்பெயரை சொல்லி யார் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக சொன்னாலும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அப்படி ஏமாந்தால் அதற்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முத்தையா, தனது அறிக்கையில் கூறியுள்ளார்.