‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது அதே நடிகர் சங்கத்தால் தயாரிப்பாளர் சங்கத்திலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அக்., 18ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட உள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது. இதனை அதன் தலைவர் தாணு தெரிவித்தார். ஆனால் தாணுவின் இந்த செயல் தனிப்பட்ட முடிவு என்றும், சங்க உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் தாணு தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்துவிட்டார் என தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் உறுப்பினரான ஏ.எல்.அழகப்பன் அறிக்கை வெளியிட்டார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் அப்போதே பிளவு ஏற்பட்டது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கே.இ.ஞானவேல் ராஜா தலைமையில், சென்னையில் அவசரமாக ஆலோசனைக்கூட்டத்தை கூட்டியுள்ளனர். இதில் தாணுவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக வேறு ஒருவரையோ அல்லது ஞானவேல் ராஜாவையே தலைவர் பதவிக்கு கொண்டு வரலாம் என்றும், இல்லையென்றால் புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக விரைவில் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பிளவால் தாணுவின் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.