‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அரண்மனை படத்தில் ஹன்சிகா பேயாக நடித்ததை அடுத்து, மாயா படத்தில் நயன்தாரா நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது அரண்மனை-2 மற்றும் நாயகி படங்களில் த்ரிஷாவும் பேயாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் அரண்மனை-2 படத்தில் அப்படத்தின் முதல் பாகத்தை விட அதிகப்படியான கிராபிக்ஸ் மிரட்டல்களை வைத்திருக்கும் சுந்தர்.சி., பல காட்சிகளில் த்ரிஷாவை ரோப்பில் கட்டி தொங்கவிட்டபடி படமாக்கியிருக்கிறார். அந்த அளவுக்கு த்ரிஷாவின் பேயாட்டம் இந்த படத்தில் அதிரடியாக படமாக்கப்பட்டுள்ளதாம்.
அதையடுத்து மாயாவில் நயன்தாரா நடித்தது போன்று நாயகி படத்தில் லீடு ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இந்த படமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படமும் பேய் கதையில்தான் உருவாகிறது. அதோடு, நாயகி படத்துக்காக ஒரு நள்ளிரவு காட்சியை படமாக்கும்போது, பேயாக நடித்த த்ரிஷாவை 7 நாட்கள் வரை ரோப்பில் கட்டி தொங்க விட்டபடி நடிக்க வைத்துள்ளனர். தொடர்ந்து அப்படி நடித்ததால் உடம்பு வலியில் துடித்துப்போன த்ரிஷா, 7 நாட்கள் நடித்ததற்கு 7 நாட்கள் படப்பிடிப்புக்கு லீவு போட்டு விட்டு சென்னை வந்து ஓய்வெடுத்தாராம்.