'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
சுந்தர்.சியின் ரெண்டு படத்தில் தமிழுக்கு வந்தவர் அனுஷ்கா. அதன்பிறகு தெலுங்கில் அவர் நடித்து வெளியான அருந்ததி அவரை பிரபலமாக்கியது. ரெண்டு படம் ஓடாததால் அவரை கண்டுகொள்ளாத கோடம்பாக்கம் அதன்பிறகுதான் அனுஷ்காவை திரும்பிப்பார்த்தது. அதையடுத்து விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கத் தொடங்கி, தெலுங்கு சினிமாவைப் போலவே தமிழிலும் முன்னணி நடிகையாகி விட்டார் அனுஷ்கா. அந்த வகையில், தமிழ், தெலுங்கில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ள அனுஷ்கா, பலமுறை காதல் வதந்தியிலும் சிக்கியிருக்கிறார். ஆனால் அதற்கு எந்த பதிலும் கொடுத்ததில்லை. காத்துவாக்கில் வந்த செய்தி காற்றோடு பறந்து போகட்டும் என்றுதான் இருந்தார்.
அந்த வகையில், சமீபத்தில் பாகுபலியில் நடித்து வந்தபோது அப்பட நாயகன் பிரபாசுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்து வந்தபோது ஆர்யாவுடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் இந்த செய்தி குறித்து அனுஷ்காவை மீடியாக்கள் அணுகியபோது, பதில் சொல்ல மறுத்து விட்டார். ஆனால் தனது சினிமா நண்பர்களிடம், சினிமாவுக்கு வந்தபிறகு இதுமாதிரி எத்தனையோ காதல் கிசுகிசுக்களை பார்த்து விட்டேன். இதற்கு பதில் கொடுத்தால்தான் ரொம்ப நாளைக்கு நிற்கும். கண்டும் காணாதது போல் இருந்து விட்டால் வந்த வேகத்திலேயே காணாமல் போய் விடும். மேலும், எனக்கெல்லாம் காதல் வராது. அதற்கான நேரமும் இல்லை. அதனால் எதிர்காலத்தில் எனக்கு கணவராக வரப்போகிறவரையே காதலிக்கும் முடிவில் இருக்கிறேன் என்று சொல்லி சினிமா வட்டார யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அனுஷ்கா.