போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணை தலைவர்கள், 24 செயற்குழு உறுப்பினர்கள் ஆக 29 பதவிக்கான போட்டிக்கு மொத்தம் 71 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
ஆய்வில் அலாவுதீன், பாலகிருஷ்ணராவ், வாசுதேவன் ஆகிய 3 பேரின் மனுக்கள் போதிய ஆவணங்கள் இணைக்காததால் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 68 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் விஷால், சரத்குமார் அணி¬யைத் தவிர 10 பேர் சுயேட்சைகளாக மனு தாக்கல் செய்துள்ளர். வேட்புமனுவை வாபஸ் பெற வருகிற 7ந் தேதி கடைசி நாள், 8ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட இருக்கிறது.