ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
ஜீவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அதிபர். பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பெரும் தோல்வியடைந்த படம். இதனை கண்ஸ்டோரியம் ஸ்டூடியோ சார்பில் கனடா வாழ் தமிழர் டி.சிவகுமார் தயாரித்திருந்தார். முதல் படம் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றே தீருவேன் என்று அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டார். மேலும் ஆண்டுக்கு 3 படங்கள் தயாரிப்பேன் என்றும் சொல்கிறார். அவர் கூறியதாவது:
அதிபர் படம் என் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றியது. ரியல் எஸ்டேட் அரக்கர்களிடம் என்னைப்போல யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட படம். அதன் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை. நான் சொன்ன விஷயம் மக்களை சென்று சேர்ந்ததில் மகிழ்ச்சிதான்.
தற்போது யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அடுத்த படத்தை தயாரிக்கிறேன். அதன் கதையை நான் எழுதியிருக்கிறேன். நான் அவனில்லை படத்தை இயக்கி செல்வா இயக்குகிறார். 3 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். போரின் போது ஒரு ஊரே திரண்டு வேறொரு நாட்டுக்கு செல்கிறது. அவர்கள் எப்படிச் சென்றார்கள். சென்ற இடத்தில் என்ன மாதிரி வாழ்ந்தார்கள் என்கிற கதை. இலங்கை ராணுவம், விடுதலைபுலிகள் போன்ற எந்த அம்சமும் இருக்காது. மனித உணர்வுகளை மையமாக கொண்ட படமாக இருக்கும். அடுத்து ஜனவரியில் பெரிய ஹீரோ நடிக்கும் கமர்ஷியல் படம் ஒன்றை தயாரிக்கிறேன். ஆண்டுக்கு 3 படங்கள் தயாரிக்கும் திட்டம் வைத்திருக்கிறேன். என்கிறார் சிவகுமார்.