‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு சரித்திர காலத் திரைப்படமாக வெளிவந்துள்ள படம் 'புலி'. படம் வெளிவருவதற்கு முன்பாக இந்தப் படத்தைப் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன. இது ஒரு 'டைம் மிஷின்' படமென்றும், அரச கதை என்றும் ஆளாளுக்கு எதை எதையோ சொல்லி வந்தார்கள். ஆனால், அவர்கள் கற்பனைகளை மீறி 'புலி' படம் ஒரு முழு நீள ஃபேன்டஸி படமாக வெளிவந்துள்ளது.
படம் வெளிவந்த நாள் முதல் இப்படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்கள் மிகவும் கடுமையாக இருந்தது. இருந்தாலும் அதையெல்லாம் மீறி கடந்த மூன்று நாட்களாக படம் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் தெரிவிக்கிறார்கள். சமூக வலைத்தளங்களின் விமர்சனங்கள், மீமீக்கள் ஆகியவை இந்தப் படத்திற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சினிமா பார்க்க வருபவர்களின் குறைந்த சதவிகிதத்தினரே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். தியேட்டர்களுக்கு அதிகமாக வந்து படம் பார்ப்பவர்கள் சாதாரண ரசிகர்களே என பிரபல வினியோகஸ்தர் தெரிவிக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக குடும்பத்தினர் தியேட்டர் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் படம் பிடித்துள்ளது. அவர்களைக் கவரும் விதத்தில் அடுத்தடுத்த பிரமோஷன்களைச் செய்தால் அது படத்திற்கு பலமாக அமையும் என்கிறார் அவர்.
இதற்கு முந்தைய விஜய் படங்கள் அளவிற்கு இந்தப் படம் ஆக்ஷன் படமாக இல்லையென்றாலும் கடந்த மூன்று நாட்களில் சராசரியாக சுமார் 30 கோடி முதல் 35 கோடி வரை வசூலித்திருக்கும் என்கிறார்கள். தமிழ்நாடு தவிர கர்நாடகா, கேரளாவில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை விட கொஞ்சம் குறைவாக ஆனாலும் மோசமான வசூல் இல்லை என்றே சொல்கிறார்கள். அமெரிக்காவிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாம். விமர்சனங்களையும் மீறி படம் வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் கோலிவுட்டில் பேச்சாக இருக்கிறது. தெலுங்கில் ஒரு நாள் தள்ளி வெளியானதால் வசூல் குறைவாக உள்ளதாம். இருந்தாலும் 'விஷுவல் ட்ரீட்'டாக இந்தப் படம் சிறப்பாக அமைந்துள்ளது என்ற பாராட்டு எழுந்துள்ளது.
இருந்தாலும் படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இன்னும் பிரமாதமான ஒரு படத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் மீதுதான் பலரின் விமர்சனம் உள்ளது. இன்றுடன் படம் எப்படியும் 50 கோடியைத் தொட வாய்ப்புள்ளதாகவே திரையுல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.