ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் வீட்டிலும் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, பல்லாவரத்தில் உள்ள நடிகை சமந்தாவின் வீட்டில் சோதனை நடந்த போது அதைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி ஒன்றின் கேமராவை சமந்தாவின் சகோதரர் தள்ளி விட்டதும், அடித்ததுமான சம்பவம் நடந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த வீடியோ காட்சிகள் வேகமாகப் பரவி செய்தியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அந்த சம்பவத்தையடுத்துப் பேசிய சமந்தாவின் தந்தை, “நாங்கள் இங்கு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இங்கு சமந்தா எப்போதாவதுதான் வருவார். அவருடைய சம்பாதியத்தில் நாங்கள் எதையும் அனுபவிப்பதில்லை. அவர் இங்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. இந்தப் பிரச்சனையில் எங்களை இழுக்காதீர்கள்,” எனப் பேசினார்.
சமந்தா அவருடைய பெற்றோரைப் பார்க்க அடிக்கடி வருவதில்லை என்றால், அவர் ஷுட்டிங் செல்லும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெற்றோருடன் இருப்பதில்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சமந்தாவிற்கு பல்லாவரம் வீடு தவிர சென்னையின் முக்கியப் பகுதி ஒன்றில் மற்றொரு வீடும், ஹைதராபாத்தில் இன்னொரு வீடும் இருப்பதாகச் சொல்கிறார்கள். சமந்தாவின் தந்தை அளித்த பேட்டி திரையுலகத்தினரிடமும், மீடியாக்களிடமும் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருடன் இல்லாமல் சமந்தா தனியாக வசிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது பற்றிய விளக்கத்தை சமந்தா அளித்தால்தான் அவர் தந்தை பேசியதற்கான அர்த்தம் சரியாக விளங்கும்.