போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விதார்த், சமுத்திரகனி நடித்த படம் காடு. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சமஸ்கிருதி. கேரளத்து நடிகையான இவர் ஐந்து அடிக்கும் குறைவாக இவர் இருந்தபோதும் அவரது குடும்ப பாங்கான முகத்துக்காகவே காடு படத்திற்கு இவரை புக் பண்ணியதாக சொன்னார்கள். அந்த படத்திலும் இயல்பாக நடித்திருந்தார் சமஸ்கிருதி. அதனால் அவருக்கு அடுத்தபடியாக தமிழில் பல படங்கள் கமிட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது சமஸ்கிருதியின் கைவசம் இருப்பது வில் அம்பு படம் மட்டுமே. டைரக்டர் சுசீந்திரன் தயாரித்துள்ள இப்படத்தை ரமேஷ்சுப்ரமணியம் இயக்கியிருக்கிறார். வழக்கு எண் ஸ்ரீ, பொறியாளன் ஹாரிஸ் கல்யாண் ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ள இந்த படத்தில் இன்னொரு நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் இருக்கிறார்.
அதோடு சமஸ்கிருதியின் நடிப்பு மற்றும் தோற்றம் தேவயானியின் சாயலில் இருப்பதாக பலரும் கருத்து சொன்னதோடு, தேவயானி இடத்தை பிடிக்குமாறும் அறிவுறுத்தினார்களாம். ஆனால் அது அத்தனை எளிதான விசயமல்ல என்றாலும், தேவயானியைப் போன்று நடிப்பதற்கு முயற்சி எடுக்கப்போவதாக கூறி வரும் சமஸ்கிருதி, காடு, வில் அம்பு படங்களில் ஹோம்லியாக நடித்திருந்தபோதும், கதைக்கு அவசியப்பட்டால் தேவையான கிளாமர் காட்டி நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறுகிறார். மேலும், தனது மிதமான கிளாமர் ஆல்பம் ஒன்றையும் கோலிவுட்டில் சுற்றலில் விட்டிருக்கிறார் சமஸ்கிருதி.