‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
யோகி படத்தில் காமெடியனாக நடித்த பாபு, அதன்பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் காமெடியனாக நடித்தவர், அருள்நிதி-ரம்யாநம்பீசன் நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் ஷோலோ காமெடியனாக நடித்தார். அந்த படம் பெரிதாக ஓடாதபோதும், யோகி பாபுவின் நடிப்பு கோலிவுட்டில் பேசப்பட்டது. அதனால் இப்போது பல படங்களில் அவர் தனி காமெடியனாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில், தல தளபதி களத்துல -என்ற பெயரில் படப்பிடிப்பு நடந்து வரும் ஒரு படத்தில் காமெடியனாக கஞ்சா கருப்புவிடம்தான் பேசி வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் கஞ்சா கருப்புவை விட யோகி பாபுவிற்கே மார்க்கெட் இருப்பதாக சொல்லி, அவரை இந்த படத்தில் காமெடியனாக்கி விட்டனர். அட்வான்ஸ் வாங்கும் நேரத்தில் தனது வாய்ப்பு யோகி பாபுவுக்கு போய் விட்டதால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார் கஞ்சா கருப்பு.
மேலும், வளர்ந்து வரும் காமெடியன் என்பதால் யோகி பாபு சம்பள விசயத்தில் பெரிதாக கறார் செய்வதில்லையாம். அதனால் பட்ஜெட் பட நிறுவனங்கள் தங்களது பட்ஜெட்டிற்கேற்ற காமெடியன் அவர்தான் என்று பாபுவை புக் பண்ணி வருகிறார்கள். விளைவு, கஞ்சா கருப்புவை போன்று மேலும் சில காமெடியன்களின் வாய்ப்புகளும் யோகி பாபு பக்கம் திரும்பி நிற்கிறதாம். இதனால் திரைக்குப்பின்னால் பல காமெடியன்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார் அவர்.