இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
சில நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்பம் குழந்தை குட்டிகள் என்று வாழ்க்கையை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் சிலர், சினிமாவில் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வருவார்கள். அந்த வரிசையில், திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவான ஸ்ரீதேவி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதேபோல் ஜோதிகாவும் இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்த பிறகு 36 வயதினிலே படத்தில் என்ட்ரி ஆனார்.
இந்த வரிசையில், டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபாலும், திருமணத்திற்கு பிறகு சூர்யா தயாரித்து கெஸ்ட் ரோலில் நத்துள்ள பசங்க-2 படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருக்கிறார். அதையடுத்து கணவர் ஏ.எல்.விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து தயாரிக்கும் படவேலைகளில் ஈடுபட்டு வரும் அமலாபால், அடுத்தபடியாக தெலுங்கில் விஷ்ணுமஞ்சு நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
மேலும், ஸ்ரீதேவி, ஜோதிகா போன்ற நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிப்பதைப்போன்று அமலாபாலும், தனது குடும்ப இமேஜை பாதிக்காத அழுத்தமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.