‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்த கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் என பலரும் ஹீரோக்களாகி விட்டதால் கோலிவுட்டில் காமெடியன் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காமெடிக்கே சம்பந்தமில்லாத பல நடிகர்கள் காமெடியன் என்ற பெயரில் நடித்துக்கொண்டிருந்தாலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றவராக இருப்பவர் சூரி மட்டுமே. அந்த வகையில், தற்போது அவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதனால் ரொம்ப பிசியாகி விட்டார் சூரி.
விளைவு, வில்லனாக நடித்து வந்த நான் கடவுள் ராஜேந்திரன் தற்போதுஅவருக்கு அடுத்தபடியான காமெடியனாகி விட்டார். அவரை பிரதானமாக வைத்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரும் பிசி காமெடியன்தான். இந்த நிலையில், தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படத்தில் ராஜேந்திரன் கமிட்டாகியுள்ளார்.
இந்த படத்தில் வேலாயுதம், ஜில்லா உள்பட விஜய்யுடன் பல படங்களில் நடித்திருக்கும் சூரியைதான் நடிக்க வைக்க திட்டமிட்டார்களாம். ஆனால், அவரால் இவர்கள் கேட்ட தேதியில் கால்சீட் கொடுக்க முடியவில்லையாம். அதனால், சூரிக்கு பதிலாக ராஜேந்திரனை புக் பண்ணியுள்ளனர். ஆக, விஜய் படத்தில் நடித்து விட்டதின் மூலம் தற்போது ராஜேந்திரனும் முன்னணி காமெடியன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.