‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒரு படம் தோல்வியடைந்தால் அது பற்றி சம்பந்தப்பட்ட நடிகர்கள், கலைஞர்கள் யாருமே அதிகம் பேச மாட்டார்கள். யார் மீதாவது பழியைப் போட்டுவிட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அதே, ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் போதும் என்ன தோணுகிறதோ அதை பேசுவார்கள். அப்படி ஓவராகப் பேசி காணாமல் போன நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிகம். இதுவரை நல்ல பையன் என்று பெயரெடுத்த ஜெயம் ரவி 'தனி ஒருவன்' வெற்றிக்குப் பிறகு ஓவராகவே பேசி வருகிறார்.
அந்தப் படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்க பத்திரிகையளார்களைச் சந்தித்த போது கூட பத்திரிகையாளர்களை வைத்துக் கொண்டே, 'பத்திரிகையாளர்கள் மீது எனக்கு மரியாதையே இருந்ததில்லை,” என்றார். அந்த நிகழ்ச்சி முடிந்ததுமே பத்திரிகையாளர்கள் சிலர் அவரிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். 'தனி ஒருவன்' படத்தின் வெற்றிக்கு மீடியாக்களும் முக்கிய காரணம் என்பதை மறந்து விட்டு அவர் அப்படிப் பேசியிருந்தார்.
நேற்று நடந்த 'தற்காப்பு' இசை வெளியீட்டு விழாவிலும் தற்காப்புக்காகத்தான் பலர் படம் எடுக்க வருகிறார்கள். அப்படித் தற்காப்புக்காகப் படம் எடுக்காதீர்கள். நானும் தற்காப்புக்காக சில படங்களில் நடித்திருக்கிறேன். நாலு பாட்டு, நாலு பைட்டு, கதை சுமாராக இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். சினிமா பொழுது போக்கும் இல்லை, கலையும் இல்லை, பார்ப்பவர்களைக் கட்டிப் போட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
மைக் கிடைத்தால் போதும் அட்வைஸ்களை அள்ளி விடும் நடிகர்கள் பட்டியலில் தற்போது ஜெயம் ரவியும் இணைந்து விட்டார். ஒரு வேளை 'சகலகலா வல்லவன்' பட அனுபவத்தைப் பற்றி பேசியிருப்பாரோ...? . இப்படி ஏதாவது மேடை கிடைத்தால்தானே பேச முடியும்...