போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மலையாளத்தில் நான்கு வருடங்களுக்கு முன் 'ட்ராபிக்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர்தான் ராஜேஷ் பிள்ளை.. கடந்த ஜனவரியில் இவர் இயக்கத்தில், நிவின்பாலி, அமலாபால் நடிப்பில் வெளியான 'மிலி' திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது. இந்தப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ராஜேஷ் பிள்ளை. த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனும் ஜெயசூர்யாவும் இணைந்து நடிக்கின்றனர். அதைவிட முக்கியமான விஷயம் மஞ்சு வாரியார் இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிய பாலிவுட் கேமராமேனான சந்தோஷ் தூண்டியில் என்பவரை அழைத்து வந்துள்ளார் ராஜேஷ் பிள்ளை. 'க்ரிஷ்', 'ரவுடி ரத்தோர்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சந்தோஷ் தூண்டியில் கேரளாவை சேர்ந்தவர் தான். இன்னும் சொல்லப்போனால் மலையாளத்தில் தான் தனது கேரியரையே இவர் ஆரம்பித்தார். பின்னர் பாலிவுட்டுக்கு சென்றாலும் கூட, மோகன்லால் நடித்த் 'ஆகாச கோபுரங்கள்' உட்பட ஒரு சில மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். அடுத்தமாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.