போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் நானி,நடிகை சமந்தா,நடிகர் சுதீப் நடிப்பில் வெளியான நான் ஈ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. அண்மையில் பாகுபலி படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் வெற்றி கண்ட ராஜமௌலி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிவிட்டார். பாகுபலி 2 படத்திற்கு பின்னர் நடிகர் மகேஷ் பாபு அல்லது நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்தை ராஜமௌலி இயக்குவார் என தகவல் வெளிவந்தது. ஆனால் பாகுபலி 2 படத்திற்கு பின்னர் ராஜமௌலி நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என கூறப்படுகின்றது. இத்தகவலை நடிகர் நானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நான் ஈ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நானி கூறுகையில் ராஜமௌலி பாகுபலி 2 படத்திற்கு பின்னர் நான் ஈ படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் என கூறியுள்ளார். இதற்கான பணிகளும் நடைபெறுவதாகவும் நானி தெரிவித்துள்ளார்.