‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.தங்கசாமி. இதில் ராட்டினம் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் லகுபரன்-சுவாதி நடித்திருந்தனர். அதற்கடுத்து ஆர்யா தம்பி சத்யாவை வைத்து எட்டுத்திக்கும் மதயானை படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமி அந்த படத்தின் லீடு ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில், அடுத்தபடியாக இரண்டு படங்களில் அவர் நாயகனாக கமிட்டாகியிருக்கிறார். அதற்கான வேலைகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.
இதுபற்றி டைரக்டர் கே.எஸ்.தங்கசாமி கூறுகையில், சினிமாவில் நடிகராக வேண்டும் என்றுதான் நான் வந்தேன். ஆனால் எதிர்பாராத வகையில் டைரக்டராகி விட்டேன். ராட்டினம் படம் எனக்கு நல்லதொரு அடையாளத்தையும் கொடுத்தது. ஆனால் எனக்குள் ஒரு நடிகன் இருந்து வெளியே வர துடித்துக்கொண்டிருந்த தால், எட்டுத்திக்கும் மதயானை படத்தில் லீடு ரோலில் நானே நடித்தேன். அந்த படம் என்னால் வெயிட்டான வேடத்தில் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுத்திக்கொடுத்தது.